ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதி அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2018-12-01 11:08 GMT
திருப்பதி அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரங்கம் பேட்டை வனப்பகுதியில் செம்மரம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, இன்று அதிகாலை வனப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு டன் எடை கொண்ட 58 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்படன. இவற்றை சரக்கு வாகனத்தில் ஏற்றி கடத்த முயன்ற  சென்னையைச் சேர்ந்த சத்யராஜ், வேலூரை  சேர்ந்த  பாஸ்கர் மற்றும் சித்தூரை சேர்ந்த ரூபேஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்