அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி வீச்சு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசப்பட்டது. டெல்லி மாநில தலைமைச் செயலக வளாகத்துக்குள்ளேயே இந்த சம்பவம் நடைபெற்றது.

Update: 2018-11-20 14:18 GMT
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசப்பட்டது. டெல்லி மாநில தலைமைச் செயலக வளாகத்துக்குள்ளேயே இந்த சம்பவம் நடைபெற்றது. மதிய உணவு சாப்பிட சென்றபோது, மர்ம நபர் ஒருவர், கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடியை வீசியதால் தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மிளகாய் பொடி வீசியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். டெல்லியில் முதலமைச்சருக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்