ஆந்திராவில் ரவுடியை கொலை செய்து இதயத்தை அறுத்து எடுத்து சென்ற மர்மநபர்கள்...

ஆந்திராவில் உள்ள கர்னூலில் பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்து இதயத்தை வெட்டி மர்மநபர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-11-09 06:08 GMT
ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த பிரபல ரவுடி சென்னையா. கர்னூல் சாய்பாபா காலனியில் வசித்து வந்த சென்னையா பல்வேறு வழக்குகளில் சிறை சென்று வந்தவர். நேற்று இரவு அவரை துங்கபத்ரா நதி கரையில் வெட்டி கொலை செய்த மர்மநபர்கள் இதயத்தை அறுத்து எடுத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கர்னூல் போலீசார், உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக இக்கொலை சம்பவம் நிகழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்