விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு : டெல்லியில் கைதான முதல் நபர்

டெல்லி காஜிப்பூர் பகுதியில் விதிகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக தமதீப் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2018-11-05 13:58 GMT
டெல்லி காஜிப்பூர் பகுதியில் விதிகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக தமதீப் என்பவரை போலீஸார் கைது செய்தனர். தமதீப் வீ்ட்டின் அருகில் வசிக்கும் தீன்பந்துலு என்பவர் போன் மூலம் புகார் 
அளித்துள்ளார். இதையடுத்து நடந்த விசாரணையில் தமதீப்பின் மகன்கள் முதலில் பட்டாசு வெடித்ததாகவும், அதன்பின்னர் தமதீப்பும் பட்டாசு வெடித்தாக தெரியவந்தது. இதையடுத்து தமதீப் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னர் நடந்த முதல் கைது இதுவாகும்.
Tags:    

மேலும் செய்திகள்