சபரிமலை விவகாரம் : பந்தளத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி

நிலக்கல் மற்றும் பம்பையில் நேற்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க கூடாது என போராடியவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து பா.ஜ.க. வினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2018-10-18 12:22 GMT
நிலக்கல் மற்றும் பம்பையில் நேற்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க கூடாது என போராடியவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து, சபரிமலை பாதுகாப்பு குழு சார்பில் கேரளா மாநிலம் முழுவதும் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பந்தளத்தில் பா.ஜ.க. வினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். அப்போது கேரள அரசுக்கும் ,தேவசம் போர்டுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்