அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் வேண்டும் - மோகன் பகவத்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2018-10-18 11:50 GMT
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேட்டுக்கொண்டுள்ளார். விஜயதசமியை முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ராமர் கோயில் ஏன் கட்டப்படவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாக கூறிய அவர், இந்த பிரச்சனையை பல கட்சிகள் அரசியல் ஆக்குவதாகவும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்