நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலம்: சிறிய சேஷ வாகனத்தில் கிருஷ்ணர் வீதி உலா

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி மலையப்ப சுவாமி கிருஷ்ணர் அவதாரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் வீதி உலா வந்தார்.

Update: 2018-10-11 05:03 GMT
திருமலை ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, நவராத்திரி பிரம்மோற்சவம், அங்குரார்ப்பணம் நிகழ்வுடன் தொடங்கியது. 2ஆம் நாளான இன்று மலையப்ப சுவாமி கிருஷ்ணர் அவதாரத்தில் சிறிய  சேஷ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழுப்பி கிருஷ்ணரை தரிசனம் செய்தனர். 

பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டம் ஆடியும் பஜனைகள் பாடியபடியும், மகா விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வேடம் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்