இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்கியது கேரள அரசு

உச்சநீதிமன்ற உத்தரவின் படி இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாயை இழப்பீடு தொகையாக கேரள அரசு வழங்கியுள்ளது.

Update: 2018-10-10 10:33 GMT
உச்சநீதிமன்ற உத்தரவின் படி, இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, 50 லட்ச ரூபாயை இழப்பீடு தொகையாக கேரள அரசு வழங்கியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் இந்திய ரகசியங்களை வெளிநாட்டிற்கு தெரிவித்ததாக கூறி கைது செய்யப்பட்டு 24 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவருக்கான இழப்பீட்டு தொகையை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்