கேரள முதல்வர் கூட்டத்தை புறக்கணிக்கும் சபரிமலை தந்திரிகள்...

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த ஆலோசனை,கூட்டத்தில் பங்கேற்பதில்லை என சபரிமலை தந்திரிகள் மற்றும் பந்தள அரண்மனை பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2018-10-07 12:53 GMT
* சபரிமலையில் பெண்களை அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

* கேரளாவில் பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அடுத்தவாரம் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு, கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் ஏற்பாடு செய்துள்ளார். நாளை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்பதில்லை என சபரிமலை தந்திரிகள் மற்றும் பந்தள அரண்மனை பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, சபரிமலை விவகாரத்தில், பந்தளம் அரண்மனை அறக்கட்டளை சார்பாக,  உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்