கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சர்ச்சை பேச்சு : பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பொறுப்பற்ற முறையில் பேசி வருவதாக குற்றம் சாட்டி மாநிலம் முழுவதும் பாஜக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

Update: 2018-09-21 15:13 GMT
கர்நாடகாவில், பாஜக தங்களது அரசை கவிழ்க்க முயற்சித்து வருவதாக, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் பெங்களூரூவில் உள்ள மைசூர் வங்கிகளில் போராட்டம் நடத்தினர். முன்னாள் துணை முதலமைச்சர் ஆர் அசோக் மற்றும் மக்களவை உறுப்பினர் shobha karandlaje ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர். முன்னதாக, முதல்வர் குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன கர்நாடக டிஜிபி நீலமணி ராஜுவிடம் புகார் மனு ஒன்றையும் பாஜகவினர் அளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்