வாராக்கடன் உயர்வு விவகாரம் : ரகுராம் ராஜனின் குற்றச்சாட்டை மறுக்கும் காங்கிரஸ்
வாராக்கடன் அதிகரிப்பு தொடர்பான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
வாராக்கடன் அதிகரிப்பு தொடர்பான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. 2016ஆம் ஆண்டு ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்துக்கு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். 2014ம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி விலகி சென்ற போது வாராக்கடன்கள் அளவு 2 புள்ளி 83 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது எனவும் அது தற்போது 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததற்கு பிரதமர் மோடியின் அரசே பெறுப்பு எனவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.