பேராயர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறும் கன்னியாஸ்திரி

தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பேராயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரி, வாடிகன் திருச்சபைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2018-09-12 04:12 GMT
கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்டத்தின் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கல் தன்னை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கேரளாவைச் சேர்ந்த, 43 வயது கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்திருந்தார். பேராயர் ஃப்ராங்கோ குறித்து, வாடிகன் திருச்சபையின் இந்திய பிரதிநிதிக்கு, கடந்த மே மாதத்திலே 3 முறை கடிதம் எழுதியதாகவும் ஆனால் அது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அந்த கன்னியாஸ்திரி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், உரிய நடவடிக்கை வேண்டும் எனக் கூறி, தனது சக கன்னியாஸ்திரிகளுடன் போராட்டம் நடத்தி வருகிறார். தற்போது அவர் மீண்டும், வாடிகன் திருச்சபைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏழு பக்கங்கள் கொண்ட அந்தக் கடித்ததில், தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி விசாரணையை முடக்க ஃப்ராங்கோ முயற்சிப்பதாகவும், பேராயர் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்