கேரளா வெள்ளம் - களத்தில் தந்தி டிவி..!

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், ராணுவம் மற்றும் தேசிய மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-08-19 02:49 GMT
கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் தேசிய மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள செங்கனூர், ஆறன்முளா, கோழஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. கோழஞ்சேரி பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு, உணவு, மருந்து பொருட்கள் படகுகள் மூலம் அளிக்கப்பட்டு வருகின்றன. பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 272 முகாம்களில் 40 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்