"பிரதமர் நிர்ணயித்த இலக்கை நிறைவேற்றுவதே எங்கள் பணி" -இஸ்ரோ தலைவர் சிவன்

ககன்யான் திட்டத்தில் பிரதமர் நிர்ணயித்த இலக்கை நிறைவேற்றுவது தான் எங்களது பணி என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-15 11:55 GMT
வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியரை ஏற்றிக் கொண்டு ககன்யான் விண்கலம் தேசியக் கொடியை சுமந்தபடி செல்லும் என சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், பிரதமரின் கால நிர்ணயத்திற்குள் திட்டத்தை நிறைவேற்றுவது தங்களது கடமை என தெரிவித்துள்ளார்.ஏற்கனவே ககன்யான் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுதொடர்பான பல தொழில் நுட்பப் பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, பிரதமர் நிர்ணயித்துள்ள இலக்கை அடைய செயல் திட்டத்தை மாற்றி அமைத்து விரைவுப்படுத்த உள்ளதாகவும் சிவன் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்