ஆதார் தகவலை கொண்டு பாதிப்பை ஏற்படுத்துங்கள் - டிராய் தலைவர் பகிரங்க சவால்
சமூகவலைதளத்தில் தனது ஆதார் விவரத்தை வெளியிட்டு, அதை எவ்வாறு தவறாக பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டும்படி ஆர்.எஸ். ஷர்மா சவால் விடுத்துள்ளார்.
ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாகவே உள்ளதாக மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. இந்த நிலையில் சமூகவலைதளத்தில் தனது ஆதார் விவரத்தை வெளியிட்டு, அதை எவ்வாறு தவறாக பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டும்படி இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா சவால் விடுத்துள்ளார். ஆதார் திட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வரும் ஷர்மாவின் இந்த திடீர் சவால் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.