இலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி..
புதுடெல்லியில் இருந்து காணொளி மூலம் பிரதமர் நரேந்திரமோடி இந்த ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.
இந்தியா உதவியுடன் இலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவு படுத்தும் திட்டத்தை இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக துவக்கி வைத்துள்ளனர்.நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி இலங்கை முழுவதும் இந்த சேவையை விரிவு படுத்த இந்தியா உதவியதில் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டார். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் நிகழ்வுகளில் ஆம்புலன்ஸ் சேவை திட்டம் முக்கிய அம்சம் என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்தார்.