டெல்லியில் 300 அடி உயர கிரேனில் ஏறி தற்கொலை மிரட்டல்

10 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மிரட்டல் விடுத்த நபர் கைது

Update: 2018-07-13 10:26 GMT
டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் கட்டுமானப் பணி நடந்து வரும் இடத்தில் நேற்றிரவு 9 மணிக்கு, 300 அடி உயரமுள்ள கிரேனில்  ஒரு நபர் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். தம்அருகில் யாராவது வந்தால் கீழே குதித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவருடன் நீண்ட நேரம் பேச்சு நடத்தியும் பயன் கிடைக்கவில்லை. இந்நிலையில், 10 மணி நேரப் போராட்டத்திற்கு பின், இன்று காலை அந்த நபரை கிரேனில் இருந்து கிழே இறக்கிய போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று  விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்