பழனி முருகன் கோவில் தேவஸ்தான அலுவலகத்தில் தீ...

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவில் தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான கோப்புகள் சாம்பலாகின.

Update: 2018-07-04 12:31 GMT
பழனி முருகன் கோவில் தேவஸ்தான அலுவலகத்தில் தீ...

இன்று மாலை சுமார் மூன்றரை மணியளவில் தேவஸ்தான அலுவலகத்தின் முதல் தளத்தில் திடீரென கரும்புகை வந்துள்ளது. இதனை கவனித்த பொதுமக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரை ஊற்றி, கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். விபத்துக்கு மின் கசிவே காரணம் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பழனி கோவிலில், சிலை காணாமல் போன விவகாரம் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தீ விபத்து நிகழ்ந்துள்ளது பக்தர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்