கடல் அரிப்பால் சேதம் அடைந்த வீடுகள் : இலவச வீடுகள் வழங்க கோரிக்கை

சென்னை பட்டினப்பாக்கத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பால் வீடுகள் சேதம் அடைவதாக மீனவப் பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2018-06-26 10:31 GMT
சென்னையில் பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக வீடுகள் சேதம் அடைவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  15க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். தங்களது உடமைகள் கடலில் அடித்து செல்லப்பட்டதாக கவலை தெரிவிக்கும் மீனவர்கள், உயிர் பயத்துடன் இங்கு வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர். உடனடியாக, தமிழக அரசு மீனவர்களுக்கு இலவச வீடுகள் வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்