மதுரை சின்னப்பிள்ளைக்கு "அவ்வையார் விருது"

சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளைக்கு, தமிழக அரசின் உயரிய "அவ்வையார் விருது" வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கவுரவித்துள்ளார்.

Update: 2018-06-20 14:03 GMT
கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதை அங்கீகரிக்கும் வகையில், சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளைக்கு, தமிழக அரசின் உயரிய "அவ்வையார் விருது" வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கவுரவித்துள்ளார். சென்னை  - தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய அரசு, மதுரை சின்னப் பிள்ளைக்கு ஸ்ரீ சக்தி புரஸ்கார் விருது வழங்கி, கவுரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்