"பிற மாநில நடிகைகளுக்கு பொங்கி எழுந்தனர்.."அவங்க மேல மன வருத்தம் இருக்கு" - நடிகை ரஞ்சனா நாச்சியார்
நடிகர் சங்கம் தனக்காக குரல் கொடுக்காதது வருத்தமளிப்பதாக, நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார். அரசு பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் கைதாகி, நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்ற நிலையில், மாங்காடு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரஞ்சனா நாச்சியார், பொதுமக்கள் சார்ந்த விஷயத்திற்காக, தான் குரல் கொடுத்ததாக தெரிவித்தார்.
"Other state actresses got angry..- Actress Ranjana Nachiar