நடிகர் மம்முட்டி நிலம் தொடர்பான வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-26 19:53 GMT
நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழிபள்ளம் கிராமத்தில் நடிகர் மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு எனும் காப்புக்காடு நிலமாக மறுவகைப்படுத்தி, கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், 2007ஆம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை கழுவேலி புறம்போக்காக மறுவகைபடுத்தபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி பவானி சுப்பராயன் முன்னிலையில் நடந்த வழக்கு விசாரணையில், வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்