நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை

நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார்.

Update: 2019-07-02 09:41 GMT
நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார். அலிபிரியில் இருந்து திருமலை வரை நடிகை சமந்தா நடந்தே சென்றார். சமந்தா வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் அலிபிரியில் இருந்து அவருடன் திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து சென்றனர். இரவு திருமலையில் தங்கிய சமந்தா, இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் மலையப்பரை தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் இருந்த ரசிகர்கள் ஒரு சிலர், சமந்தாவோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்