சினிமாவில் இருந்து ஒதுங்கும் நடிகை ஸைரா வாசிம் : காஷ்மீர் பெண் திடீர் அறிவிப்பால் பாலிவுட் அதிர்ச்சி

டங்கல் திரைப்படத்தில் அமீர்கான் மகளாக நடித்து தேசிய விருது பெற்ற நடிகை ஸைரா வாசிம், பாலிவுட் திரை உலகில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

Update: 2019-07-01 04:21 GMT
டங்கல் திரைப்படத்தில் அமீர்கான் மகளாக நடித்து தேசிய விருது பெற்ற நடிகை ஸைரா வாசிம், பாலிவுட் திரை உலகில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். மத ரீதியான அழுத்தங்கள் காரணமாக திரைப்பட துறையிலிருந்து வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார். காஷ்மீரை சேர்ந்தவரான அவர், சமூக வலைதள பக்கத்தில், தான் முஸ்லீம் என்பதால் பெருமைப்படுவதாகவும், தனக்கு பாகிஸ்தானில் அதிக ரசிகர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். அந்த பதிவுக்கான  எதிர்வினைகளால் மன உளைச்சல் அடைந்து இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்