திருப்பதியில் நடிகை சமந்தா சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-04-03 03:40 GMT
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். சமந்தாவும், நாக சைதன்யாவும் இணைந்து 'மஜிலி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெற்றி பெற வேண்டி சுவாமி தரிசனம் செய்ததாக தம்பதியினர் தெரிவித்துள்ளனர். சமந்தா கோயிலை விட்டு வெளியே வரும் போது அங்கிருந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக கார் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்