அர்ஜூன் மீதான பாலியல் புகார் தவறானது - பி.டி.செல்வகுமார், இயக்குநர்
நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் புகார், தவறாது என இயக்குநர் பி.டி.செல்வகுமார்கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி கேரளாவில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்காக போராடிய தியாகி கொடிக்கால் ஷேக்கை, கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கவுரவப்படுத்தும் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குனர் பி.டி செல்வகுமார் கலந்து கொண்டு, 108 விதவை தாய்மார்களுக்கு இலவச ஆடுகளை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் புகார், தவறாது என கூறினார்.