இயற்கை சீற்றத்தால் நடிகர் கார்த்தியின் படப்பிடிப்பு பாதிப்பு

குலுமணாலியில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் நடிகர் கார்த்தியின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

Update: 2018-09-24 13:12 GMT
குலுமணாலியில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் நடிகர் கார்த்தியின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. குலுமணாலிக்கு படப்பிடிப்பிற்காக சென்ற தேவ் படக்குழு, அங்கு  ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் படக்குழுவினர் 140 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பால் படத்தின் தயாரிப்பாளர் லட்சுமணனுக்கு ஒன்றரை கோடி ரூபாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்