"ஐ.எஸ்.வுடன் போராட வேண்டிய நிலை இலங்கைக்கு இல்லை" - சிறிசேன பேச்சு

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான சிறப்பு விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை கிடைத்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.வுடன் போராட வேண்டிய நிலை இலங்கைக்கு இல்லை - சிறிசேன பேச்சு
x
இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான சிறப்பு விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை கிடைத்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இடைக்கால அறிக்கையிலுள்ள விவரங்கள் தொடர்பாக இன்று சட்டத் துறையினருடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். இந்த கொடூர தாக்குதலை தடுக்க காவல்துறை தலைவருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் சந்தர்ப்பம் இருந்தபோதும் அவர்கள் அதனைச் செய்யவில்லை எனவும் அதிபர் சிறிசேனா சுட்டிக் காட்டினார். விடுதலை புலிகளுடன்  போராடியதை போல, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் போராட வேண்டிய நிலை இலங்கைக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்