"அரசியலில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது " - இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை

தற்போதைய இலங்கை அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக மாறியுள்ளதாக, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
அரசியலில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது  - இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை
x
தற்போதைய இலங்கை அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக மாறியுள்ளதாக, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இலங்கை வவுனியாவில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் இளைஞர், மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு  பேசிய அவர்,  இன விடுதலைக்கான போராட்ட பயணத்தில் நன்றி எனும் வார்த்தையை தேடி அலைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும், அதிபர் சிறிசேனாவும் கண்முன்னே நிற்பதாகவும், இதில் ஒருவர் சட்டவிரோதமாக ஆட்சியை மாற்றி அமைத்துள்ளதாகவும்,  மற்றொருவர் தான் அரசியலுக்கு வந்த பாதையை மறந்து புதிய கட்சியை தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம் எனவும் மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்