நிதியமைச்சர் பணிகளை துவக்கிய பிரதமர் ராஜபக்சே

இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்படுவதாகவும், சர்வாதிகாரப் போக்கு மீண்டும் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பணிகளை துவக்கிய பிரதமர் ராஜபக்சே
x
இலங்கை பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ராஜபக்சே, அமைச்சரவையில் நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, முதல் நாளான நேற்று, நிதியமைச்சக அலுவலகத்திற்கு வந்த அவர் தமது பணிகளை துவக்கினார். அப்போது உரையாற்றிய பிரதமர்  ராஜபக்சே, கடந்த 25 ஆண்டுகளாக, தேர்தலை காணாத வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை தமது ஆட்சிகாலத்தில் நடத்தி  காட்டியதாக கூறினார். இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்படுவதாகவும், சர்வாதிகாரப் போக்கு மீண்டும் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு 
பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்