ஒரே மேடையில் சிறிசேனா, ராஜபக்சே....

இலங்கை கண்டியில் நடைபெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில், சிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒன்றாக பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரே மேடையில் சிறிசேனா, ராஜபக்சே....
x
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது, முன்னாள் அதிபர் ராஜபக்சே மீது கடும் விமர்சனத்தை தெரிவித்திருந்தார். இதுபோல, ராஜபக்சேயும் பதிலுக்கு கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இந்நிலையில், இலங்கை கண்டியில் நடைபெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில், சிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒன்றாக பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.  தாய்லாந்து அரசிடம் இருந்து விருது பெற்ற, இலங்கையை சேர்ந்த, கலாநிதி கொடக மங்கள தேரர் என்பவரை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் இருவரும் அருகருகே அமர்ந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Next Story

மேலும் செய்திகள்