"தமிழக சட்டப்பேரவை வரும் 14 ஆம் தேதி கூடவுள்ள நிலையில், 8 ஆம் தேதி ஆய்வுக்குழு கூட்டம்"

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க, வரும் 8ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது.
x
தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 14ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக, அலுவல் ஆய்வுக்குழு வரும் 8ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடுகிறது. சபாநாயகர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா என்பது குறித்தும் ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. 
 


Next Story

மேலும் செய்திகள்