ஆலயங்களில் பக்தர்களுக்கு அனுமதி - தயார் நிலையில் கோவில்கள்

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து வழிப்பாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை பல்வேறு ஆலய நிர்வாகங்கள் செய்து வருகின்றன.
x
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து வழிப்பாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை பல்வேறு ஆலய நிர்வாகங்கள் செய்து வருகின்றன,. ஆறு மாதத்திற்கு பிறகு ப க்தர்கள் வர உள்ளதால் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில்,  சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் தயார் நிலையில் உள்ளன,. ஒரு நாளைக்கு எத்தனை பக்தர்களை அனுமதிப்பது உள்ளிட்ட அரசின் வழிக்காட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்