"எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தலைமையில் கூட்டணி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தஞ்சை மாவட்டத்தில் புதிதாக 71 கோடி மதிப்பில் 11 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமார் 40 கோடியில் முடிவுற்ற 36 பணிகளை தொடங்கி வைத்தார்.
எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தலைமையில் கூட்டணி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தஞ்சை மாவட்டத்தில் புதிதாக 71 கோடி மதிப்பில் 11 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமார் 40 கோடியில் முடிவுற்ற 36 பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 8 ஆயிரத்து 357 பயனாளிகளுக்கு 46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் 2மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது, நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2500 வழங்க வேண்டும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி  அமையும் என்றார்

Next Story

மேலும் செய்திகள்