"ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து முறையாக இ பாஸ் பெறலாம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

முதலமைச்சர் உத்தரவின் பேரில் இ-பாஸ் எண்ணிக்கையை 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
x
முதலமைச்சர் உத்தரவின் பேரில், இ-பாஸ் எண்ணிக்கையை 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நீலம் அமைப்புடன் இணைந்து, அயனாவரத்தில் நடத்திய கொரோனா சமூக விழிப்புணர்வு செயல் திட்ட நிகழ்ச்சி பங்கேற்ற ஆணையர் பிரகாஷ், சிறுவர், சிறுமிகள் வரைந்த ஓவியங்கள் மற்றும் விழிப்புணர்வு கோலங்களை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 8 லட்சம் பரிசோதனைகளை நெருங்கி உள்ளதாக கூறினார். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 புள்ளி 5 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளது என்றும், 4 மாதங்களுக்கு இதேபோல் தடுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பிரகாஷ் கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்