"கொரோனா எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு நோய்" - சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இயற்கை சீற்றம்போல கொரோனா தொற்று ஒரு நிகழ்வு என்றும், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதே கொரோனாவிற்கான மருந்து என்றும் சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
இயற்கை சீற்றம்போல கொரோனா தொற்று ஒரு நிகழ்வு என்றும், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதே கொரோனாவிற்கான மருந்து என்றும் சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள கொரோனா அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா கவனிப்பு மையங்களை அமைச்சர் உதயகுமார், சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த போது, கொரோனா எண்ணிக்கையை பார்த்து அச்சப்பட தேவையில்லை என்றும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் இருந்து விலக்கிபார்ப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் கேட்டு கொண்டார். 



Next Story

மேலும் செய்திகள்