நேரடி தொடர்பு இல்லாதவருக்கு கொரோனா - சமூக பரவலா என கிராம மக்கள் அச்சம்

ஆண்டிப்பட்டி அருகே கோத்தலூத்து கிராமத்தில் கொரோனா பாதித்தவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாத பெண்ணுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
நேரடி தொடர்பு இல்லாதவருக்கு கொரோனா - சமூக பரவலா என கிராம மக்கள் அச்சம்
x
ஆண்டிப்பட்டி அருகே கோத்தலூத்து கிராமத்தில் கொரோனா பாதித்தவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாத பெண்ணுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 50 வயது மதிக்கத்தக்க அந்த பெண், எந்தவித பயண வரலாறும் இல்லை என்று சொல்லப்படுகிறது. தற்போது, அவர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சமூக தொற்றாக இருக்குமோ என கிராமமக்கள் அச்சம் அடைந்துள்ளது. கொரோனா பாதித்த பெண் வசித்த பகுதி மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்