காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்க அனுமதி கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட வியாபாரிகள்...

காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்க அனுமதி கோரி ஆட்சியரை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
x
காஞ்சிபுரத்தில், புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, நோய் பாதிப்பு எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது. அதிகம் பாதித்த மாங்காடு, குன்றத்தூர் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் பொன்னையன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரை சூழ்ந்த வியாபாரிகள், கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, கடைகளை திறக்க அனுமதி வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியர் , கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்