10ம் வகுப்பு பொதுத்தேர்வு - புதிய முறையில் நடத்த முடிவு
தமிழகத்தில்10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை, புதிய முறையில் நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 1 முதல் 12ம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வை சுமூகமாக நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 3,000 தேர்வு மையங்களுக்கு மாற்றாக, தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கும்12 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், தேர்வு மையங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும், தேர்வு அறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, 20 மாணவர்களுக்கு பதிலாக 10 பேரை, மட்டும் அமர வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிகமான தேர்வு மையங்கள் அமைப்பதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, இ-பாஸ் வழங்கி, சொந்த ஊர்களுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கவும், தேவைப்படுவோருக்கு, பேருந்து வசதி ஏற்பாடு செய்யவும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு, அவர்கள் வசிப்பிடத்திலேயே சிறப்பு மையத்தை ஏற்படுத்தி, தேர்வை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது. மேலும், தேர்வை புதிய முறையில் சுமூகமாக நடத்தி முடிக்க, தேர்வுத்துறையும், பள்ளி கல்வித்துறையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story
