விபத்தில் சிக்கியவர்களை மீட்ட காவல் ஆய்வாளர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் விபத்தில் சிக்கியவர்களை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த ஆய்வாளர் ராஜ முரளிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் விபத்தில் சிக்கியவர்களை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த ஆய்வாளர் ராஜ முரளிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மங்களபட்டி அருகே பனை மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த துவரங்குறிச்சி கிடாரிப்பட்டி சேர்ந்த ஜெயராமன், சிவராமன் ஆகிய இருவரையும் மீட்ட காவல் ஆய்வாளார், செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
Next Story