போதை தரும் கள் விற்பனை - 2 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி பிரிவு பகுதியில் போதை தரும் கள்ளை இறக்குமதி செய்து சிலர் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி பிரிவு பகுதியில் போதை தரும் கள்ளை இறக்குமதி செய்து சிலர் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், விராலிப்பட்டியை சேர்ந்த சந்திரன் மற்றும் சின்னம நாயக்கன்பாளையம் சேர்ந்த பிரசாத் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் பனைமரத்தில் இருந்து கள் எடுத்து அதில் போதை தரும் பொருட்களை கலந்து விற்றது தெரியவந்தது. கைதான இருவரும் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story