கொரோனா அறிகுறியுடன் மாயமான பெண் - போலீஸார் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதி

ஓசூர் அரசு மருத்துவமனையில் இருந்து, கொரோனா தொற்றுடன் மாயமான பெண்ணை போலீசார் மீட்டனர்.
கொரோனா அறிகுறியுடன் மாயமான பெண் - போலீஸார் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதி
x
ஓசூர் அரசு மருத்துவமனையில் இருந்து, கொரோனா தொற்றுடன் மாயமான பெண்ணை போலீசார் மீட்டனர். காலேகுண்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா தொற்று இருப்பதை அறிந்தனர். இதனையடுத்து அவர், கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அந்த பெண் வார்டிலிருந்து திடீரென மாயமானதால், போலீஸாரின் உதவியுடன் தேடி வந்தனர். மருத்துவமனையிலிருந்து வெளியேறி வீட்டிற்கு சென்ற அவரை, போலீசார் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Next Story

மேலும் செய்திகள்