கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக விவரங்கள்

தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு இருப்பது இம்மாதம் 7ம் தேதி கண்டறியப்பட்டது
கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக விவரங்கள்
x
தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு இருப்பது இம்மாதம் 7ம் தேதி கண்டறியப்பட்டது. ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரம் திரும்பியவருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்

* 2வது நபராக டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய வாலிபருக்கு பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்தது.

* கொரோனா தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது நபர் , அயர்லாந்து நாட்டின் டப்லின் நகரில் இருந்து சென்னை வந்த 21 வயது வாலிபர் ஆவார்...

* அதிகபட்சமாக மாநிலத்தின் தலைநகரான சென்னையில் 19 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணாநகர் மண்டலத்தை சேர்ந்த 5 பேர் , கோடம்பாக்கத்தை சேர்ந்த 5 பேர் , வளசரவாக்கம் மண்டலத்தை சேர்ந்த 2 பேர் , ஆலந்தூர், கோட்டூபுரம் , தேனாம்பேட்டை மண்டலங்களை சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றனர்.


*  ஈரோட்டில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதார துறை தெரிவித்து உள்ளது. 4 பேரும் அண்மையில் டெல்லியில் இருந்து ஈரோடு திரும்பியுள்ளனர். அனைவரும் பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

* சேலத்தில் மொத்தம் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதில் 4 பேர் இந்தோனேஷியாவில் இருந்து சேலம் திரும்பியவர்கள்.. ஒருவர் சென்னையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி.. அனைவரும் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* அரியலூர் மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் பணிபுரிந்த அரியலூரை சேர்ந்த 25வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  

* தாய்லாந்திலிருந்து மதுரை வந்திருந்த இருவர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்ட 54 வயது முதியவர்  , உயிரிழந்தார்.

* கோவையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. புதிதாக கொரோனா தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்ட 4 பேர் , தாய்லாந்தில் இருந்து திரும்பிய நபருடன் தொடர்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது..

* நெல்லை , தஞ்சை ,திருச்சி , ராணிப்பேட்டை , விருதுநகர் பகுதிகளில் தலா ஒருவரென ஐந்து பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்