31ஆம் தேதியுடன் முடிகிறது சட்டப்பேரவை - பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு

கொரோனா எதிரொலியால், தமிழக சட்டப் பேரவை கூட்டம் முன்கூட்டியே நிறைவடைகிறது.
x
மார்ச் 8ஆம் தேதி தொடங்கிய சட்டப் பேரவை கூட்டம், ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா எதிரொலி காரணமாக, வருகிற 31ஆம் தேதியுடன் கூட்டத் தொடர் நிறைவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான, அறிவிப்பை பேரவையில் சபாநாயகர் தனபால் வெளியிட்டார். மேலும், வருகிற 31ஆம் தேதி வரை காலை, மாலை என இரு வேளைகளில், சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும், ஒரே நாட்களில் 6 துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்