உப்பாறு அணைக்கு கூடுதல் நீர் திறக்க கோரி உண்ணாவிரதம் - பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்கு, அரசூர் மதகில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரி பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உப்பாறு அணைக்கு கூடுதல் நீர் திறக்க கோரி உண்ணாவிரதம் - பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது
x
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்கு, அரசூர் மதகில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரி, பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசூர் மதகில் இருந்து வினாடிக்கு 174 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில் உப்பாறு அணைக்கு தற்போது 74 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே வருவதாகவும், இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்