கூட்டணி கட்சிகள் மீது தவறான கருத்து : அமைச்சர்களை அழைத்து முதல்வர் கண்டித்தார் - கே.சி.கருப்பணன்

ஈரோடு மாவட்டம் ,கவுந்தப்பாடியில் முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
x
ஈரோடு மாவட்டம் ,கவுந்தப்பாடியில் முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுற்றுச்சுழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், 524 பயனாளிகளுக்கு சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கினார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , கூட்டணி கட்சிகள் குறித்து தவறான கருத்து தெரிவித்த அமைச்சர்கள் சிலரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டித்ததாக தெரிவித்தார். 
 


Next Story

மேலும் செய்திகள்