ரூ.109 கோடியில் 370 புதிய பேருந்துகள் : சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சென்னை தலைமைச்செயலகத்தில் 370 புதிய அரசு பேருந்துகள் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
x
சென்னை தலைமைச்செயலகத்தில் 370 புதிய அரசு பேருந்துகள் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 109 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பேருந்துகள் சென்னை, சேலம், கும்பகோணம், மதுரை, விழுப்புரம், நெல்லை ஆகிய கோட்டங்களுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கும் வழங்கப்படுகிறது. மேலும் தனியார் நிறுவனம் மூலமாக அரசு மருத்துவமனைக்கு 5 ஆம்புலன்ஸ் சேவையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்டோர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்