"யார் இடையூறாக இருந்தாலும் சிறை செல்வது உறுதி" - பொன்.மாணிக்கவேல்

கடத்தப்பட்ட கோயில் சிலைகள் விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
x
கடத்தப்பட்ட கோயில் சிலைகள் விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். நெல்லை கல்லிடைக்குறிச்சி கோயிலில் நடராஜர் சிலையை ஒப்படைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிலை கண்காணிப்பிற்காக 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று தெரிவித்தார். மேலும், சிலைகளை மீட்பதற்கு யார் இடையூறாக இருந்தாலும், அவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்றும், அவர் தனது அதிரடியான பாணியில் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்