7 பேர் விடுதலை விவகாரம் : நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி...

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி உள்ளிட்ட ஏழு  பேரை விடுதலை செய்வது தொடர்பாக  2018 செப்டம்பரில் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி, தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், நளினி மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்