ஏழு பேர் விடுதலை விவகாரம் : "அரசு தன் வேலையை சரியாக செய்துவிட்டது" - முதலமைச்சர் பழனிச்சாமி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு தன் வேலையை சரியாக செய்துவிட்டதாகவும், இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
ஏழு பேர் விடுதலை விவகாரம் : அரசு தன் வேலையை சரியாக செய்துவிட்டது - முதலமைச்சர் பழனிச்சாமி
x
சட்டப்பேரவையில் சட்டத்துறை, நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் சுதர்சனம், ஏழு பேர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீண்ட நாட்களாகிறது எனவும் அது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எழுவர் விடுதலை தொடர்பாக தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், ஆளுநர் இனி முடிவெடுப்பார் என தெரிவித்தார். அதே நேரத்தில், திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை கூட்டத்தில் நளினியை மற்றும் விடுதலை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் பேசினார். 

Next Story

மேலும் செய்திகள்